CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Saturday, October 31, 2009







Friday, October 30, 2009

மறக்க மடியாத தளும்பாய்நீ

அன்று நீண்ட நேரம் பேசிய
இதயமே இப்போ ஏன்
இந்த தயக்கம்

என்றும் என் சொந்தமாய்
என் சிறிய இதயத்தில்
ஒரு துளி கூட நகர்த்தாமல்
என்னும் சுவாசிக்கின்றேன்
உன்னை.

காதல் என்ற கல்லறைக்குள்
ஈரப்பாசியாய் படர்ந்து கொண்டு
உன்னை குளிரச்செய்கின்றேன்
உன்னை.

கை கோர்த்து நடந்த காலத்ததை
மறந்து நீ.. சென்றாய்.
கோர்த்த மாலையில் காதல் என்ற
பூக்கள் உதிர்ந்து போனது
நீயும் நானும் எங்கோ ஒரு
ஓரமாய் ஒருவரை ஒருவர்
சுவாசித்தபடி வாழ்கின்றோம்
இருவரும் ஒருவரை ஒருவர்
ஏமாற்றிக்கொண்டு.....

பெண் பறவை

நீ முத்தமிட்டபோது
இதழ்கள் உதிர்ந்து
அலகுகள் தோன்றின...
நீ தழுவியபோது
கைகள் உதிர்ந்து
சிறகுகள் முளைத்தன...
நீ இணைந்தபோது
எடை இழந்து
பறக்கத் துவங்கினேன்.
இன்றுவரை கிடைக்கவில்லை
நான் இழந்தவைகள்.....
நீ உட்பட!

Saturday, October 24, 2009

கோபம்

கடுங்கோபத்தில்
உன்னைப் பார்க்காமல்...
அமர்ந்திருக்கின்றேன்!
நீ பார்க்கும் கோணத்தில்
என் முகம்
வைத்துக்கொண்டு ...

உன்னை தவிர.....

உன்னுடன் நடக்கும் போது
உன் கைகள் கோர்த்து
நடக்காததால்....
கோபம் கொண்டு
நீ முன்னே நடக்க...
உன் பின்னே ..
உன் பாதங்கள்
நடந்த தடங்களில்
என் பாதங்கள் கோர்த்து
நடந்ததை உலகமே..
பார்த்தது....
உன்னை தவிர......

நிழல்!

உயர்ந்து நிற்கிறேன் நான்
எப்போதும் போலவே
என் அருகிலேயே மௌனமாய்
விழுந்து கிடக்கிறது
என் நிழல்.

காயம்.....மாயம்!

அவள் மலரைப் பறித்தபோது
அச்செடிக்கு வலித்தது
மனக்காயமாய்.
அவள் கூந்தலில் அதைக் கண்டு,
காயம் மறைந்ததுமாயமாய்!

காதல் கண்னீர்

உன் கண்களில்நான் காதலாக குடியேறினேன் ......
நீ கண்ணீராகஎன்னை வெளியேற்றினாய் .......
உன் வானத்திற்குநான் மேகமாக வந்தேன் ......
நீ மழையாகஎன்னை கீழே தள்ளினாய் .....
உன் உள்ளங்கைக்குபனித்துளியாக வந்தேன் .....
நீ வெயிலாகஎன்னை மறைய் செய்தாய் .....
உன் உயிருக்குள்இதயமாக வந்தேன் .....
என் துடிப்பையேநிறுத்தி விட்டாய் .....
நீ என்னை விட்டு செல்வதாக நினைத்துக்கொண்டு இருக்கிறாய் ....
ஆம் ! முழுவதுமாக உன்னை என்னிடம் விட்டு விட்டு தான் செல்கிறாய் .....

காதல்

தேவதையே !!!
நீ பார்க்கும் பார்வையால்
என் மனதிற்குள் வியர்வையடி
"இவள் காதலில் சிக்கிவிடாதே என்று "
சுண்டி வரும் பால் போல் ,
உன் பார்வையில் சுரண்டு வரும்
காதலிடம்நான் சரணடைந்தேன்
உன் பார்வைகளுக்கான அர்த்தங்களை தேடினேன்
நிறங்கள் பலவானாலும் பூகளுக்குள் இருக்கும் தேன் ஒன்று தான் !!!
உன் பார்வைகளுக்கான அர்த்தமும் ஒன்று தான் ,
என் தேடலுக்கான பதிலும் அது தன், அது
உடல் கடந்தது !
ஊடல் கடந்தது !
கடல் கடந்தது !
மூடல் கடந்தது !
உன் விழி மடல்களுக்குள் ஒளிந்திருப்பது !
அதை காதல் என்பர் !
"நீ என்னை காதலிக்கின்ராயா ?" என்று கேட்க விளைந்தேன்
அதற்கான பதிலும் உன் பார்வை மட்டும் தானா ???
உன் பார்வைகளின் பயணத்துடன் ,

இதயத்தில் நீ!

இதயமாற்றுச் சிகிச்சைக்கு
இணங்கவில்லை நான்...
இதயத்தில் நீ!

விலகாத வினாடிகளாய் இருவரும்

உன் னோடு பேச நானும்
என்னோடு பேச நீயும்
காத்திருக்கும் பல மணி நேரங்களில்
தத்தளிக்கும் மனதை அடக்க
முடியாத பொழுது.
நீயும் நானும் நெருங்கிய நேரம்
கருத்து வேறுபாடுகள் சிலதால்
தூரம் அதிகமாகிப்போகின்றது:
என்ன செய்ய அருகில் இருந்தால்
கேள்விகள் தொடுக்க மறுத்து
உன்னை அரவணைத்துக் கொண்டு
இருப்பேன் ஒவ்வொரு வினாடியும்.

Friday, October 23, 2009

சுமையான காதல்!

மறக்க முடியவில்லை என்னால் உன்னை...
உன் சிரிப்பு என் சிந்தனையை கவர்ந்துவிட்டது
நீ பேசிய வார்த்தைகள் மனப்பாடமாய் ஒலிகின்றது...
என்று நீ வருத்தப்பட்டு கலங்கவைக்காதே என்னை !!!!!

கண் தூங்கும் நேரத்தில் கனவாய் கடக்கின்றாய்...
விழித்து இருக்கும் நேரத்தில் என் வழி மறைகின்றாய்..
என்று நீ வருத்தப்பட்டு கஷ்டப்படுத்தாதே என்னை!!!!

இயல்பாக சிரித்ததும்
இயல்பாக பழகியதும்
இயற்கையின் விதியால்
இன்று காதலாக உருவெடுத்துவிட்டது...
நான் என்ன செய்வது??

மறக்க முடியாத
சுமையான இந்த காதலை
சுகமாக மனதில் சுமக்கலாமே??

நான் இருந்தும்

நீ இல்லை
என்று
ஆனபோது
நான் இருந்தும்
இல்லாமல்
ஆனேன்

அன்புள்ள தோழி...

எந்த எதிர்பார்ப்புகள் இன்றியும்
என் கைகளை பற்றிக் கொண்டாய்..
யார் என்று கேட்டேன்?..
உன் நிழல் என்கிறாய்..
என் கனவுகள் எங்கே என்றேன்?
உன் கண்களை பார் என்கிறாய்..
என் உன் உலகம் எது என்றேன்?
என் மார்போடு தலை சாய்ந்து இது தான் என்கிறாய்..
சொர்க்கம் எது என்றேன்?
மறைமுகமாய் தலை சாய்கிறாய் என் மடியில்...
நட்பு எது என்றேன்?
அதில் பிரிவும் உள்ளடக்கம் என்பதை உறுதி படுத்தினாய்..
எனக்கு திருமணம் என்று கூறி...

நீயே சொல்லடி பெண்ணே

கனவுகளில் வாழ்ந்த என்னை
கைப்பிடித்து அழைத்து வந்து
நினைவுகளில் வாழ வாழவைத்தது
உன் காதல் தானே
இதை உன்னிடம் கூறினால்
நட்பில் எப்படி காதல் வரும் என்று கேட்கிறாய்..
நல்ல நட்பில்தானே புரிதல் இருக்கும்
புரிதலில்தானே காதல் வரும்..
அப்படியெனில் என் காதல் சரிதானே..
என் காதல் தவறு
எனில் கண்டவுடன் வரும் காதலை
என்ன சொல்வது நீயே சொல்லடி பெண்ணே....!

நீ என்னை
மறந்து போனதிலிருந்து,
என்னைத் தேடுகின்றேன் . . .
எங்கெங்கோ ?!

பேசாதே !!!

சுற்றம் மறந்து
சுயத்தையும் மறந்து
உன்னுடன் பேசும் வேளையில்
உளறிவிட போகிறேன்
அந்த மூன்றெழுத்து மந்திரத்தை !!!!

பேசாதே என்னிடம்....!!!

தனிமை..

ஆயிரம் பேர்களோடு இருந்தலும்...
தனிமையாய்
உணர்கிறேன்...
நீ என்னோடு
இல்லாததால்...

நட்பினால் காதல்???

நல்ல நட்பின் புரிதலில்
நல்ல காதல் வந்துவிட்டது என்கிறாய்??
காதல் வந்தபின் - அந்த
நல்ல நட்பு காணாமல்
போய்விட்டதை உணர்ந்தாயா??
தோழனாக தோள் சாயவும் முடியாமல்
காதலனாக கவி பாடவும் முடியாமல்
நட்பை உடைத்து கண்டபடி கஷ்டபடுத்தும்
இந்த காதல் இனிமையானதா??

தோல்வி...

நீ என்னை கொஞ்சும் போதெல்லாம்
உன்னைஉற்று நோக்கி பார்த்து
ஒரு கவிதை தொகுப்பு எழுத
எனக்கும் ஆசை தான்...
ஆனால் என்னெவோ தெரியவில்லை...
நீ என் அருகில் வரும் போதெல்லாம்...
எனை கொஞ்ச மாட்டானா?
என்ற ஏக்கத்திலேயே..
கண்கள் மூடிக் கொண்டுதோற்க்க தயாரகிவிடுவேன்...

தனிமை...

என் தோழியே...
என்னை ஆயுள் கைதியாய்..
பிடித்து..
தனிமைச் சிறையில்அடைத்து விட்டாய்..
இதற்கு நீ எனக்கு
மரணத் தண்டனையே
கொடுத்திருக்கலாம் ...

தோற்ப்பதில் வெற்றி

தோற்றூப் போனவன்எழுதுகிறேன்....
நேற்றூ நீ என் காதலியாய்இருந்தபோது
நிமிஷங்கள் ஓவ்வொன்றும்நேசமய் இருந்தது....
ஆனால்இன்றுஅப்படி இல்லை
வேறாக இருந்தவள் வே றா கிப்போனாள்...
ஆனாலும்நீ வாழ்க
என்னுடை தோல்வி
உனக்கு சந்தோஷம்தறுமெனில்
நான் தோற்ப்பதில் தான்எனக்கு வெற்றி....

சும்மா,சும்மா இதயத்தை கொல்லாத

சும்மா இருந்தவணிடத்தில் சிரித்தாய்
சும்மா இருந்த இதயத்தின் கதவு திறந்துக்கொண்டு
சும்மா கண்ணில் கதிர்வீச்சிஞாய்
சும்மா மூளையிள் கண்ணின் நிழல் பதிந்தது
சும்மா வந்து போஞாய் கண்ணும் பார்த்தது
சும்மா படி இடையில் பேசிணோம்
சும்மா எதுவும் தெரியாதே அப்பாவியாக இருந்தேன்
சும்மா கருத்தைசெல்லி இருந்தால் யேசித்துயிருப்பேன்
சும்மா, சும்மா ஒதிக்கிஞாய் , ஒதுங்கிஞாய்
சும்மா இருந்த இதயம் பிலந்தது மறந்தது எழ தாமதம் எற்பட்டது
சும்மா வெறியன் என வீண் பழீ பலர்ரோடுசூட்டிஞாய்
சும்மா உன்னை இயக்கியவன் சொல் கேட்டு இதயத்தை இருக்கிஞாய்
சும்மா பாவத்தை ஏற்றிக்கொண்டு போகாதே நம்பியவனை ஏமற்றதே
சும்மா கண்ணின் கணவுகள் கணவுயாக போய்யிற்று
சும்மா மனச்சாட்சி இருந்தாள் கோட்து பார் தப்பு தனை சொல்லம்
சும்மா இரு என்று அழகன் ஆட்கொள்வான்

தெரியவில்லை...

என்ன வேண்டுமென்று என் இதயத்திற்கு தெரியவில்லை...
உன் எண்ணம்தான் என்னவென்று
என் மனதிற்கும் தெரியவில்லை

வண்ணக்கனவுகளில்
வலம் வந்த என் வாழ்வு
இன்றோ வந்த திசை தெரியாமல்
வழியிழந்து திக்கற்று நிற்கிறது!
இருக்கிறது எண்திசை !
இருந்தும் என்ன செய்ய...?
எத்திசைதான் என்னால் செல்ல முடியும்
அந்தக் கன்னியின் கடைக்கண் பார்வை இல்லாதபோது..!

Back 2 Top