CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Sunday, November 1, 2009

அந்த ஆரம்ப நாட்களில்


அந்த ஆரம்ப நாட்களில்
உன்னிடம் தொலைப்பேசியில்
நிறைய கதைத்திருக்கிறேன்..

நம் காதலை மோப்பம்
பிடித்து விட்ட கணித ஆசிரியை

என்னை பற்றி உன் வகுப்பில்
பெருமையாக பேசும் தமிழாசிரியர்

என எல்லாக் கதைகளும் பேசி விட்டு
தொலைபேசியை வைக்கும் சமயத்தில்
சரி நான் வைக்கிறேன் பார்க்கலாம் என்பாய்..
நான் உடனே எப்போ பார்க்கலாம் என்பேன்.
கூடிசீக்கிரம் என்பாய்...

இதே கேள்வியை நான் கேட்பேன்
என உனக்கும் அதே பதிலைத் தான்
நீயும் சொல்வாய் என எனக்கும் தெரியும்..

ஆனாலும் அந்தக் கேள்வியும் பதிலும் இல்லாமல்
முடிந்ததில்லை நம் கதையாடல்..!

0 comments:

Back 2 Top