CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Sunday, November 1, 2009

முறிந்துவிட்ட நட்பு மரம்...

எதிர் பார்த்கிருந்தேன் வாடிக்கையாய்.
எதிர் வருவாயென நூலக வாயிலில்.
பொழுதுகள் நிசப்தமாய் நகர்ந்துபோக
பொருள் அறிந்தேன் நீ விலகி சென்றதை..

நட்புத்தானே காரமாய் வாதம் செய்ததும்,
அன்புதானே அழுத்தமாய்ச் சொன்னதும்...?
வண்ணத்துப் பூச்சியென
கருத்தெல்லாம் பல நிறம்
எந்த வர்ணம் குறைபெறும்? உணர்வாயோ..?

நூலக வாயிற்படிகளிலே
கற்பனை, கவிதை நயம்
கற்கண்டாய் இனித்துச் சுவைதந்து
கடந்துபோன பொழுதுகளை மறப்பாயோ?
முறிந்துவிட்ட நட்பு மரம் - மீண்டும்
இளந்தளிர் பொலிவுதருங் காலம் வரும்?

0 comments:

Back 2 Top