CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Sunday, November 1, 2009

சிணுங்கல்கள்

திட்டு


செல்ல சிணுங்களுடன்
சின்னதாய் திட்டு என்றேன்
செத்துபோ.... என்றாய்.

*********

சண்டை

நீ வேண்டும் என்றுதானே
சண்டை போட்டேன்.
பிரியும்போதுதான்.
தெரிந்தது.
நீயும் வேண்டும் என்றுதான்
சண்டை போட்டாய்.என்று

*********
அவளிடம்

சொல்வாயா..? நீ..ஒரு சொல்
நானும் உன்னை நேசிக்கின்றேன்
என்று அவளிடம்.

*********
எப்படி

அனுப்பிய பரிசுப்பொருளில்
நூறு முத்தம் கொடுத்து
அனுப்பிவிட்டு கேட்டேன்.
அதில் ஒன்றாவது
பெற்றுக்கொண்டாயா..?
என்று.

உன் பதில் சொன்னது
இல்லை அதில்
நூற்றிஒன்று என்று.

கோபத்துடன்
மௌனமானபோது.என் உதடு
கண்ணே..நீ..எனக்கு கொடுக்கும்
சந்தோசத்தில் கொடுத்த
முத்தங்களை
சரியாக கணக்குபார்க்கவில்லை
அதில் ஒன்று
கூடிவிட்டது என்றாய்...

0 comments:

Back 2 Top