CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Monday, January 4, 2010

பிரிவெழுத பிரியமில்லை...

கனவுகள் சுமந்த
கவிதைகளால்
காகிதம் நிரப்பியிருந்தேன்....
மைப்பட்ட புத்தகத்தின்
பக்கங்களாக மறைந்துவிட்டிருந்தது
கண்ணீரில் குலைந்த காதலால்....
எதேட்சையாக கண்களில்
பட்டுத்தொலைக்கும்
உன் பெயரும்...
நாம் சென்ற கடற்கரையின்
மணலில் தான்
இன்னும்
இன்றும் நீ நடைப்போடுகிறாய்
என்ற எண்ணங்களும்...
வரம்பு மீறிவிட்ட வார்த்தைகளும்...
இனி எதுவும், எவையும்
துணைவரப்போவதில்லை....
பிரிவுகள் கொண்டாட
இதயம் பழக்கிவிட்டேன்......
இருந்தபோது விரும்பி,
இன்று வெறுக்கும்
வாலாட்டும் ஜீவன் தானே அது??
.
.
.
.

பிரிவெழுத பிரியமில்லை...
.
.
எனினும்,
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்......
என் நிச்சயிக்கப்பட்டுவிட்ட
சொர்க்கத்திற்கு,
திருமணநாள் நல்வாழ்த்துகள்...

0 comments:

Back 2 Top